Thursday, December 28, 2006

விழிநிமிர்த்தியபோது..



அன்றும் அப்படிதான்..
முடிவெடுதவள் போல்
நீ எழுந்து நிற்கிறாய்..!
இதுவரைநேரமும் வீசிக்கொண்டிருந்த தென்றல்
இப்போ பலமாக வீசுகிறது.
உன் முடிவுகளின் புரியாத புதிர்போலவே
காற்றும் சில வேளைகளில்
தென்றலாய்..புயலாய்..சூறாவலி(ளி)யாய்..!
அப்போதும்..உன் சுருட் கூந்தலின்
அசைவுகள், தூரிகையாய்..
அற்புதமான நவீன ஓவியமாய்..
இதயத் திரையில் காட்சியொன்றைப் புனைகிறது.
உனது முடிவின்படி..நீ நடக்கத் தொடங்க..
நானோ..அப்படியே..அதே காட்சிப் படிமத்தில்..
வெறுமையின் விளிம்பில்..
விழி நிமிர்த்தியபோது...
நீ..ஒரு புள்ளியாய் வெகுதூரம் போய்விட்டிருந்தாய்...!!!
ஓவியம்.....http://www.albertrobbe.nl/home_eng.htm

Saturday, December 23, 2006

முடியாமுடிவு..!



காலமாகி..காலமாகி..
கதை சொன்ன காலம்..
என்றே வைத்துக்கொள்..!
முடிகிறது தானே உன்னால்..!
ஏன் என்னால் மட்டும்
முடியாது போகிறது....???

ஓவியம்..
http://www.albertrobbe.nl/gallery_2_eng.htm

Saturday, December 16, 2006

ககனத்தின் கடுஞ்சுழி.

Tuesday, December 05, 2006

நின்னைத் தழுவிய பூங்காற்று

நின்னைத் தழுவிய பூங்காற்று



விட்டு விடுதலையாய்..நான் போவேனோ..
உனைத் தொலைத்துவிட்டொரு மார்க்கம் காண்பேனோ..
விண்ணில் எழுந்தே...
வீணே நான் மடிவேனோ..
உன்னில் எழுதிய பூங்காற்று..
என் இறக்கையும் தழுவிற்று...
நான் பறக்கிறேன் அன்பே....
நீயும் வா.....
விண்ணில் மட்டுமல்ல..
மண்ணிலும் கவி புனைவோம்..!!

<<<ஓவியம் பற்றி சும்மா நான் பேசிக்கொண்டேயிருக்கிறேன்..இனி நீங்களாகவே போய்ப் பாருங்கள்.இணைப்பு மட்டும் தருகிறேன். இதோ..!
http://sd911.sivit.org/cfl/cornee/galerie.htm>>>

Sunday, December 03, 2006

வெளியேறும்வெளி



நீ..பூவாயிருக்கையில்
நானுமோர் சிறு வண்டாயிருக்கையில்..
அப்போ ஒரு மெல்லிய..தென்றலின்
நிமிண்டலில்.........
உன்னிதயம் துளைத்து...
உன்னில் இடம் பிடித்தேன்.
பின்னர்...
நீ..
பிஞ்சாகி ,,,காயாகி,,,இப்போ பழம்...!
நான்...
வெளியே வரும் மார்க்கம் அறிந்திலேன்.
நீயோ..
கைகளை நீட்டி..
அகப்பட்டவனின்...கிளைகளில் தொங்குகிறாய்.
நானோ..
உன்னிதயம் கிழித்து..வெளியேறி..
ஏதெனுமொரு அண்டம் நோக்கிய
ஏகாந்தப்பெருவெளி தேடும்..
ஏழைக் கவிஞனானேன்.
அன்பே....
வேறென்ன செய்ய நான்..??

<<<ஓவியம் அல்பேட் றொபோ.>>>>