Sunday, March 15, 2009

கவியெழுதுதற் கல்வி.







ஒருவன் குதிரையில் வந்தான்.
மற்றவன் நடந்து வந்தான்.
நான் அடுத்ததாக என்ன செய்யப்போகிறேன் என்று சரியாகச் சொல்வாயானால் என் குதிரையைத் தருகிறேன்.
என்றான் குதிரயில் வந்தவன்.
நீ உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த நாட்டை விட்டே ஓடப்போகிறாய். என்றான் நடந்து வந்தவன்.
இல்லை, உன் பதில் தவறு. அடுத்ததாக இதை நான் செய்யப் போவதில்லை என்றாலும் என் குதிரையைத் தருகிறேன்.
பதில் தவறு என்றால் ஏன் குதிரையைத் தருகிறாய்..? கேட்டான் நடந்து வந்தவன்.
நீ எனக்குச் சொன்ன புத்திமதிக்கான அன்பளிப்பு இது என்றான் குதிரைக்காரன்.
எதிராளியிடமே ஐடியாக் கேட்பது வழமையாகிவிட்டது.
எங்களுக்கென்று ஒரு தனித்துவப் படைப்பாற்றல் அருகிக்கொண்டே போகிறது
தமிழ் நாட்டு அரசிலைப் போல.
எதிராளியின் பலத்திலும் பலவீனத்திலுமே..எங்கள் படைப்பாற்றல் தங்கியிருக்க வேண்டுமா..?
இலக்கியக்காரர் கூட ஏன் இப்படி நடக்கிறார்கள்..?
நான் மதிக்கும் பெரியோர்கள் கூட இப்படி சிறுமைப் படுகிறார்கள்.
இந்த வேதனகளை எங்கே கொண்டு சரி பார்க்க நான்..???

இப்படி ஒரு கவிதை எழுததொடங்கினான் அவன்.

2 Comments:

Blogger ஷைலஜா said...

வித்தியாசமான எழுத்து. ரசித்தேன் .
நிறைய இப்படி எழுதுங்கள் சூர்யகுமார் ! நல்வரவு மறுமடி இப்படி எழுதவந்தமைக்கு!

8:36 PM  
Blogger birgit said...

hi dear

i simply love your pict.

greetings
from me

Birgit

2:27 PM  

Post a Comment

<< Home