Saturday, November 11, 2006

அது ஒரு காலம்




அது ஒரு காலம்.
அழகிய நிலாக்காலம் என்றே சொல்வோமே...
ஒரு அப்பாவிச் சிறுவனாய்..
மரக் குழலூதி...மாடு மேய்க்கும் ..காலம்..!
சின்னச்..சின்ன சிட்டுக்குருவிகளுக்கெல்லாம் செவிசாச்சு..
மாயக் கண்ணன் போல..கோபியர்க்கு..குறும்பு செய்து..
கனவு மலைகளின் உச்சியில் கைகொட்டி....
உடல் அசதியில்..பெருவிரல் சப்பியபடி..
திருவிழா நெரிசலில்...
அம்மா மடியென ஆரோ மடியில் தூங்கி...!
அன்பே....
நீயும் இப்படித்தானென..
ஒருநாள்,
காதல் கிறக்கத்தில் ...
மவுன மயக்கத்தில் என் மடிமீது படுத்தபடி
நீ..சொன்னாய்...!!!
.......
அது ஒரு காலம்...ம்...ம்..அழகியதுதான் போ...!!!!!!!!

<<<ஓவியம்,,அனசன்..சோபியா...இங்லாந்து..1833..1903>>>

1 Comments:

Anonymous Anonymous said...

நல்ல கற்பனை... அப்படிச் சொன்னவள் அனைத்தையும் மறந்துவிட்டாளா???

5:08 AM  

Post a Comment

<< Home